தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/போரின் போது உயிர் தப்புவது எப்படி; ஜம்மு பள்ளிகளில் மாணவர்களுக்கு விசேஷ பயிற்சி

போரின் போது உயிர் தப்புவது எப்படி; ஜம்மு பள்ளிகளில் மாணவர்களுக்கு விசேஷ பயிற்சி

போரின் போது உயிர் தப்புவது எப்படி; ஜம்மு பள்ளிகளில் மாணவர்களுக்கு விசேஷ பயிற்சி


ADDED : மே 06, 2025 01:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 01:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: போர்க்கால சூழலின் போது, எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஜம்முவில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.

பஹல்காம் சம்பவம் எதிரொலியாக, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ ஆரம்பித்துள்ளன. எல்லையில் 12வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறி சிறிய அளவிலான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. அதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மொத்தம் 259 இடங்களில் நடத்தப்படும் என்றும், எங்கு நடைபெறும் என்ற பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் ஜம்முவில் உள்ள பள்ளிகளில் போர்க்கால சூழல் அல்லது போரின் போது எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்து செயல்முறை பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, வகுப்பறைகளில் மாணவிகள் அமர்ந்திருக்கும்போது வானில் சைரன்கள் ஒலிப்பது போன்ற சத்தங்கள் எழுப்பப்படுகிறது.

அதன் பின்னர், மாணவிகள் அனைவரும் காதுகளை இரு கைகளால் பொத்திக் கொண்டு, மேஜைகளின் அடியில் பாதுகாப்புடன் குனிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பிறகு, ஒவ்வொருவரும் வரிசையாக வகுப்பறைகளில் இருந்து காதுகளை பொத்தியவாறே பாதுகாப்பான இடத்தை நோக்கி குனிந்த படியே செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது.

அதன்படியே, மாணவிகள் ஒவ்வொருவரும் செயல்பட்டு அந்த வழிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று தற்காத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us