sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷியாபாத் கோர்ட்டில் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீர் மோதல்: போலீஸ் குவிப்பு!

/

காஷியாபாத் கோர்ட்டில் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீர் மோதல்: போலீஸ் குவிப்பு!

காஷியாபாத் கோர்ட்டில் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீர் மோதல்: போலீஸ் குவிப்பு!

காஷியாபாத் கோர்ட்டில் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீர் மோதல்: போலீஸ் குவிப்பு!

1


ADDED : அக் 29, 2024 04:17 PM

Google News

ADDED : அக் 29, 2024 04:17 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஷியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத் கோர்ட்டில், நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்ட விவாதத்தில், இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்டு தீ போல பரவியது.

இதனை தொடர்ந்து நீதிபதி தங்கியுள்ள வளாகத்திற்குள், வழக்கறிஞர்கள் பலர் புகுந்ததால், போலீசார் தடியடி நடத்தி வழக்கறிஞர்களை வெளியேற்றினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டதும், நாங்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனே சென்று வழக்கறிஞர்களை வெளியேற்றிவிட்டோம். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.

லேசான தடியடி நடத்தியதில், சில வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் பார் கவுன்சில் அமைப்பு தலையிட்டு, சம்பவம் குறித்து விசாரிக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதனிடையே கோர்ட் வளாகத்திற்கு வெளியே, பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக,

வழக்கறிஞர்கள் அடையாள போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us