sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டெங்கு பாதிப்பு திடீர் அதிகரிப்பு

/

டெங்கு பாதிப்பு திடீர் அதிகரிப்பு

டெங்கு பாதிப்பு திடீர் அதிகரிப்பு

டெங்கு பாதிப்பு திடீர் அதிகரிப்பு


ADDED : செப் 19, 2024 07:59 PM

Google News

ADDED : செப் 19, 2024 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகர்கஞ்ச்:தேசிய தலைநகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) புதன்கிழமை அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிட்டது. அதன்படி, 9ம் தேதி வரை நகரில் 650 டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இது 14ம் தேதி வரை 900க்கும் டெங்கு நோயாளிகளாக உயர்ந்தது. இது 18 சதவீத உயர்வு.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பை விட, நடப்பு ஆண்டில் பாதிப்பு விகிதம் குறைவாக இருப்பதாக மாநகராட்சி கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 14 வரை மொத்தம் 917 டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,264 டெங்கு பாதிப்புகள் இருந்தன.

அதேபோல் பாதிப்பு உயர்வு தற்போது 18 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இது 56 சதவீதமாக இருந்தது.

டில்லியில் கடந்த 8ம் தேதி, இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் பதிவு செய்யப்பட்டது. லோக் நாயக் மருத்துவமனையில் 54 வயதான ஒருவர் டெங்குவால் இறந்தார்.

கொசு மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக இதுவரை 1.06 லட்சம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் 36 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 8,639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வீடு வீடாகச் சென்று பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், புகை அடிக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us