sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பம்பையில் மலை போல குவியும் ஆடைகளால் அவதி

/

பம்பையில் மலை போல குவியும் ஆடைகளால் அவதி

பம்பையில் மலை போல குவியும் ஆடைகளால் அவதி

பம்பையில் மலை போல குவியும் ஆடைகளால் அவதி

15


ADDED : நவ 29, 2024 07:41 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:41 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: கேரளா தவிர்த்த பிற மாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் குளித்து விட்டு தங்களது ஆடைகளை நதியில் விட்டு செல்கின்றனர். இப்படி ஒரு ஐதீகம், சபரிமலை பயணத்தில் இல்லை என்று தந்திரிகளும், தேவசம் போர்டும் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்த ஆண்டு சீசனில் தொடக்கம் முதலே தமிழ், தெலுங்கு, கன்னட, ஆங்கில மொழிகளில் ஆடைகளை நதியில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வேட்டிகளும், துண்டுகளும் குவிகின்றன; இதனால், பம்பை நதி வேகமாக மாசுபடுகிறது.

திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட ஹரிஹர கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம், இந்த ஆடைகளை அப்புறப்படுத்தும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. 10 நாட்களில் மட்டும் ஒரு லாரி அளவிற்கு ஆடைகள் எடுத்து செல்லப்பட்டு உள்ளன. இங்கு எடுக்கப்படும் வேட்டி உள்ளிட்ட ஆடைகள் எருமேலிக்கு எடுத்து சென்று அங்கே உலர வைத்த பின், சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

'ஆடைகளை பம்பை நதியில் வீசி செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட அம்சங்களை யோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது' என, தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us