ADDED : பிப் 21, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்,:சம்பளம் இன்றி, ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே தாமரைசேரியைச் சேர்ந்தவர் அலீனா பென்னி, 29; அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.
ஐந்து ஆண்டுகளாக இவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.

