sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசு அதிகாரிகள் வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

/

மத்திய அரசு அதிகாரிகள் வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு அதிகாரிகள் வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு அதிகாரிகள் வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

19


ADDED : நவ 30, 2024 04:46 AM

Google News

ADDED : நவ 30, 2024 04:46 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'மத்திய அரசு அமைப்புகளின் ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகளை மாநில விசாரணை அமைப்புகள் விசாரிக்க முடியும்' என உச்சநீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்தது.

ஈ.டி., எனப்படும், அமலாக்கத்துறையின் மதுரை துணை மண்டல அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் அங்கித் திவாரி.

இடைக்கால ஜாமின்

இவர், கடந்த ஆண்டு டிச., 1ல், மாநில அரசு அதிகாரியிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், அங்கித் திவாரியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 'லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை விசாரிக்கும் எங்கள் நடைமுறைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'மத்திய அரசு அதிகாரிகள் குற்றங்களில் ஈடுபடும் போது அதை மத்திய விசாரணை அமைப்புகளும் விசாரிக்கலாம், மாநில விசாரணை அமைப்புகளும் விசாரிக்கலாம். மாநில அரசு விசாரணை அமைப்புகள் விசாரிக்கவே கூடாது என்று நாங்கள் கூறவே இல்லை' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

உரிமை இல்லை

'அதே நேரத்தில், மத்திய அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகள் அனைத்திலும் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை கூடாது என, கேட்கவும் முடியாது.

'ஏனெனில், மத்திய அரசு அதிகாரிகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும், மாநில விசாரணை அமைப்புகள் விசாரிப்பது சரியானதாக இருக்காது. நம் கூட்டாச்சி அமைப்பும் அவ்வாறு கட்டமைக்கப்படவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'குற்றம் சாட்டப்பட்டுள்ள அங்கித் திவாரி தன்னை எந்த விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் என கேட்க முடியாது; அவருக்கு அதற்கான உரிமை கிடையாது' என, திட்டவட்டமான வாதத்தை முன்வைத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், 'அங்கித் திவாரி தனக்கு ஜாமின் போன்ற நிவாரணங்களை மட்டுமே கேட்க முடியும்' என கூறினர்.

நிபந்தனை தளர்வு

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அங்கித் திவாரிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் நீட்டிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை இல்லாத போது, மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் அவர் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் விசாரணை அமைப்புகள் அழைக்கும்போது, விசாரணை நீதிமன்றத்தின் முன் தவறாமல் ஆஜராக வேண்டும். விசாரணை நீதிமன்றம் அனுமதிக்கும்பட்சத்தில். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக அங்கித் திவாரிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.








      Dinamalar
      Follow us