sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்

/

"யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்

"யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்

"யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்

17


UPDATED : ஆக 05, 2025 05:42 PM

ADDED : ஆக 05, 2025 12:28 PM

Google News

UPDATED : ஆக 05, 2025 05:42 PM ADDED : ஆக 05, 2025 12:28 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம் என காங்., எம்பி பிரியங்கா கூறியுள்ளார். தனது சகோதரருமான ராகுல் பேச்சு தவறுதலாக திரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சீன விவகாரம் தொடர்பாக இந்திய ராணுவத்தை தவறுதலாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் , ராகுலை கடுமையான கேள்விகளால் அவரை சங்கடத்திற்குள் ஆளாக்கினர். மத்திய அரசும் ராகுலின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்தது. ராகுல் குறித்தும் சமூகவலை தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பார்லி., வளாகத்தில் பேட்டி அளித்த பிரியங்கா கூறுகையில்;

உரிமை உண்டு


எனது சகோதரர் இந்திய ராணுவத்தின் மீது அதீத மரியாதை கொண்டவர். எப்போதும் அவர் குறைத்து பேச மாட்டார். அவர் எதுவும் தவறாக பேசவில்லை. இவர் ஒரு எதிர்கட்சியில் தலைவராக கேள்வி எழுப்ப உரிமை உண்டு. அரசுக்கு சவால் விடும் வகையில் கேள்வி கேட்பது அவரது கடமை. அந்த அடிப்படையிலேயே சீன விவகாரம் குறித்து பேசினார். ஆனால் அவரது கருத்து தவறுதலாக திரித்து பேசப்படுகிறது.



மேலும் யார் உண்மையான இந்தியன் என்பதை மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒன்றும் முடிவு செய்ய வேண்டாம்.
இவ்வாறு பிரியங்கா கூறினார்.






      Dinamalar
      Follow us