"யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்
"யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்
UPDATED : ஆக 05, 2025 05:42 PM
ADDED : ஆக 05, 2025 12:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம் என காங்., எம்பி பிரியங்கா கூறியுள்ளார். தனது சகோதரருமான ராகுல் பேச்சு தவறுதலாக திரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன விவகாரம் தொடர்பாக இந்திய ராணுவத்தை தவறுதலாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் , ராகுலை கடுமையான கேள்விகளால் அவரை சங்கடத்திற்குள் ஆளாக்கினர். மத்திய அரசும் ராகுலின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்தது. ராகுல் குறித்தும் சமூகவலை தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பார்லி., வளாகத்தில் பேட்டி அளித்த பிரியங்கா கூறுகையில்;
மேலும் யார் உண்மையான இந்தியன் என்பதை மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒன்றும் முடிவு செய்ய வேண்டாம்.இவ்வாறு பிரியங்கா கூறினார்.