sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நேரில் ஆஜராக நேரிடும் : மாநில தலைமை செயலர்களுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

/

நேரில் ஆஜராக நேரிடும் : மாநில தலைமை செயலர்களுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

நேரில் ஆஜராக நேரிடும் : மாநில தலைமை செயலர்களுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

நேரில் ஆஜராக நேரிடும் : மாநில தலைமை செயலர்களுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை


ADDED : நவ 26, 2025 06:26 AM

Google News

ADDED : நவ 26, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'போலீஸ் ஸ்டேஷன்களில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில அரசுகளின் தலைமை செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நாடு முழுதும், போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும், 'லாக் அப்' மரணங்கள் தொடர்பான விவகாரத்தை கவனத்தில் எடுத்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையின் போது, போலீஸ்

ஸ்டேஷன்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விபரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் அமர்வு உத்தரவிட்

டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, ''11 மாநிலங்கள் மட்டும் தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. மத்திய

அரசும், அதன் விசாரணை அமைப்புகளும் சிசிடிவி கேமராக்கள் தொடர்பாக எந்த தகவலையும் அளிக்கவில்லை,'' என்றார்.

இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் மூன்று வாரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் பிரமாணப் பத்திரத்தை அனைத்து தரப்பும்

விரிவாக தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், மாநில அரசுகளின் தலைமை செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, எச்சரித்தனர். வழக்கை, டிச., 16க்கு நீதிபதிகள் ஒத்தி

வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us