sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யோகேஸ்வர் வெற்றிக்காக சுரேஷ் தீவிர பிரசாரம்

/

யோகேஸ்வர் வெற்றிக்காக சுரேஷ் தீவிர பிரசாரம்

யோகேஸ்வர் வெற்றிக்காக சுரேஷ் தீவிர பிரசாரம்

யோகேஸ்வர் வெற்றிக்காக சுரேஷ் தீவிர பிரசாரம்


ADDED : நவ 03, 2024 11:31 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னப்பட்டணாவில் யோகேஸ்வர் வெற்றிக்காக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தீவிர பிரசாரம் செய்கிறார்.

ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வரை ஆதரித்து, துணை முதல்வர் சிவகுமார் தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் இரவு, பகல் பாராமல் தீவிரமாக பிரசாரம் செய்கிறார்.

''யோகேஸ்வர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, குளங்கள், ஏரிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுத்தார். குமாரசாமி முதல்வராக இருந்தும் எதுவும் செய்யவில்லை. அவரது மகனுக்காக உங்கள் ஓட்டு,'' என்று கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

''குமாரசாமியிடம் நிறைய பணம் உள்ளது. மகனின் வெற்றிக்காக பணத்தை வாரி இறைப்பார். அவரிடம் பணம் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் யோகேஸ்வருக்கு ஓட்டு போடுங்கள்,'' என்றும் கூறுகிறார்.

'கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த, லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில் சுரேஷ் தோற்றார். அவரது தோல்விக்கு யோகேஸ்வரும் ஒரு காரணம்.

ஆனால் அதை மறந்து விட்டு யோகேஸ்வர் வெற்றிக்காக, சுரேஷ் பிரசாரம் செய்கிறார்' என்று, சென்னப்பட்டணா காங்கிரஸ் தொண்டர்கள் தம்பட்டம் அடித்து கொள்கின்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us