சூர்யகுமார் அரை சதம்: பஞ்சாப் அணிக்கு 185 ரன் இலக்கு
சூர்யகுமார் அரை சதம்: பஞ்சாப் அணிக்கு 185 ரன் இலக்கு
UPDATED : மே 26, 2025 10:32 PM
ADDED : மே 26, 2025 09:39 PM

ஜெய்ப்பூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி, 184 ரன் எடுத்தது.
பிரீமியர் லீக் தொடரின் 69வது லீக் ஆட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதுகின்றன.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணி இதுவரையில் 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் மும்பை அணி, இதுவரையில் 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று 16 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
முதலில் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பவர் ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்தது.
ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 26 ரன்கள் அடுத்து விக்கெட் இழந்தார்.
சூர்யகுமார் அரை சதம்:
சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
மும்பை அணி, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு184 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜேன்சன் மற்றும் விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து மும்பை அணி, பஞ்சாப் அணிக்கு 185 ரன் இலக்கு நிர்ணயித்தது.

