வரலாறு படைத்தார் இஷான் கிஷான்; 210 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
வரலாறு படைத்தார் இஷான் கிஷான்; 210 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
UPDATED : பிப் 12, 2026 08:56 PM
ADDED : பிப் 12, 2026 06:59 PM

புதுடில்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் குவித்துள்ளது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இந்திய வீரர் இஷான் கிஷான் புதிய சாதனையை படைத்துள்ளார்.
டில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில், இந்தியா, நமீபியாவை எதிர்த்து விளையாடி வருகிறது. அபிஷேக் ஷர்மா, சிராஜூக்கு பதிலாக, சஞ்சு சாம்சன், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பிடித்திருந்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய சஞ்சு சாம்சன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசிய அவர், 8 பந்துகளில் 22 ரன் குவித்து அவுட்டானார்.
5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அடித்து 24 பந்துகளில் 61 ரன் குவித்து இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 6.5 ஓவரிலேயே 100 ரன்னை கடந்தது. தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் (12), திலக் வர்மா (25) ஆகியோர் அவுட்டாகினர்.
ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபேவின் அதிரடியால் இந்திய அணி மளமளவென ரன் குவித்தது. ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் அரைசதம் அடித்த கையோடு அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் குவித்தது.

