UPDATED : டிச 16, 2024 07:10 AM
ADDED : டிச 15, 2024 08:45 PM

புதுடில்லி: பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேனுக்கு, வயது 73, உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் (டிச.,16) சிகிச்சை பலனின்றி இன்று காலை. காலமானார்.
ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வார காலமாக, இதயம் தொடர்பாக, பிரச்னை இருந்தது. அவர், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜாகிர் உசேன் காலமானார். .அவரது மறைவினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிறுவயது முதலே மஹாராஷ்டிராவில் பல் வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். சிறந்த இசை சேவைக்காக மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார் ஜாகிர் உசேன்.
1951 இல் புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவாவுக்கு மும்பையில் மகனாக பிறந்த உசேன், தனது தந்தையால் மூன்று வயது முதலே தாள வாத்தியத்திற்கு அறிமுகப்படுத்தபட்டார்.
இந்த ஆண்டு, பேலா ஃப்ளெக், எட்கர் மேயர் மற்றும் ராகேஷ் சௌராசியா ஆகியோருடன் பாஷ்டோவுக்கான சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி உட்பட மூன்று கிராமி விருதுகளை வென்றார்.