ADDED : அக் 21, 2024 12:28 AM

கர்நாடகாவின் பாரம்பரிய நாட்டுப்புற கலை டொல்லு குனிதா, தமிழர்களின் வீர விளையாட்டு சிலம்பாட்டம் மூலம், மாநாட்டுக்கு வந்த சிறப்பு விருந்தனர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
கர்நாடக வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா தலைமையில் கவியரங்கம் நடந்தது
விராஜ்பேட்டை, மடிகேரி, தரிகெரேவில் வாழும் தமிழர்களுக்கு, அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்பாட்டில் பஸ்களில் திரளாக வந்தனர்
தங்கவயல், மங்களூரு, ஷிவமொகா, பத்ராவதி, தாவணகெரே, குடகு, மடிகேரி, சித்தாபுரா, சிக்கமகளூரு, ஹாசன், கோலார், ஹூப்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்
பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரி தமிழ் சங்கத்தின் 35 பேர் கொண்ட குழுவும்; நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு சார்பில், 40 பேர் கொண்ட குழுவும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களையும், இளைஞர்களையும் உற்சாகமூட்டினர். சிறிய சிறிய சிறார்களின் நடனம் பார்ப்போரை வியக்க வைத்தது
மொத்தம் 12 பேர் கொண்ட இளைஞர்கள் குங்பூ தற்காப்பு கலை செய்து காண்பித்து, பார்வையாளர்களின் கை தட்டலை பெற்றனர்
மாநாட்டில் பங்கேற்ற தமிழ் அமைப்புகளுக்கு, தலா 2 கிராம் தங்க காசுகள் வழங்கியும், நிர்வாகிகளையும் பாராட்டியும் கவுரவிக்கப்பட்டனர்
'நிமிர் இலக்கிய வட்டம்' நிறுவனர் கவிஞர் கா.பாபுசசிதரன் தலைமையில் சிறப்பு தமிழ்க் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் கவி பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்
பாரம்பரிய உணவான குழிப்பணியாரம் முதல் தற்போதைய மொமோஸ் வரையிலும் பல வகையான உணவு ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன
தமிழர்களின் தொன்மையை போற்றும் வகையில், கீழடி முதல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என தமிழ் மொழி கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

