sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாரணாசியில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் தவிப்பு; சென்னை அழைத்து வர ஏற்பாடு

/

வாரணாசியில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் தவிப்பு; சென்னை அழைத்து வர ஏற்பாடு

வாரணாசியில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் தவிப்பு; சென்னை அழைத்து வர ஏற்பாடு

வாரணாசியில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் தவிப்பு; சென்னை அழைத்து வர ஏற்பாடு

2


ADDED : பிப் 20, 2025 10:16 AM

Google News

ADDED : பிப் 20, 2025 10:16 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானத்தில் சென்னை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தென்னிந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டியில் பங்கேற்று விட்டு ஊர் திரும்ப முடியாமல், ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தால் தமிழகம் வர முடியாத சூழலில் உள்ள தங்களை மாநில அரசு அழைத்து வர உதவ கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கிரிக்கெட் வீரர் கேப்டன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தோம்.

ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரயிலில் ஏற முடியவில்லை. வாரணாசி ரயில் நிலையத்திலேயே அமர்ந்துள்ளோம். தங்களை மாநில அரசு அழைத்துவர உதவ வேண்டும்' என கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.






      Dinamalar
      Follow us