sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி ஐகோர்ட் நீதிபதியாக தமிழர் ஹரீஷ் பொறுப்பேற்பு

/

டில்லி ஐகோர்ட் நீதிபதியாக தமிழர் ஹரீஷ் பொறுப்பேற்பு

டில்லி ஐகோர்ட் நீதிபதியாக தமிழர் ஹரீஷ் பொறுப்பேற்பு

டில்லி ஐகோர்ட் நீதிபதியாக தமிழர் ஹரீஷ் பொறுப்பேற்பு


ADDED : ஜன 09, 2025 03:13 AM

Google News

ADDED : ஜன 09, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக அஜய் திக்பால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரீஷ் வைத்தியநாதன் சங்கர் நேற்று பதவி ஏற்றனர்.

இவர்களுக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பாக்ரூ பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதியாக பதவியேற்ற அஜய் திக்பால், 31 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.

மற்றொரு நீதிபதியான ஹரீஷ் வைத்தியநாதன் சங்கர், 51, தமிழகத்தின் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். ஏற்கனவே, பொள்ளாச்சியைச் சேர்ந்த நீதிபதி கே.வி.விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

சட்டப் படிப்பை டில்லியில் முடித்த ஹரீஷ், பிரிட்டனின் வார்விக் பல்கலையில் மேல்படிப்பை முடித்தார். உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

நாட்டின் பிரபல மூத்த வழக்கறிஞர்களான சோலி சொரப்ஜி, கே.கே.வேணுகோபால், சி.எஸ்.வைத்தியநாதன் உட்பட பல சீனியர்களிடம் பணிபுரிந்துள்ளார்.

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பதற்கு முன், மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றினார். அயோத்தி வழக்கு, கோத்ரா கலவரம், ராணுவம் மற்றும் கடற்படை தொடர்பான வழக்குகள், எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு என பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

இவர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனின் மகன்.






      Dinamalar
      Follow us