ADDED : மே 13, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயவாடா : ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நேற்று கூறியதாவது:
நம் ராணுவ வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை மற்றும் நன்றியுணர்வின் அடையாளமாக ஆந்திர அரசு ஒரு முடிவை எடுத்து உள்ளது.
இதுவரை, சொத்து வரி விலக்கு என்பது ஓய்வு பெற்ற வீரர்கள், எல்லையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது.
நம் பாதுகாப்பு படைகளில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த வீரர்களுக்கும், இனி சொத்து வரிவிலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.