sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., பிரமுகர் மிரட்டலால் ஆசிரியர் தற்கொலை

/

காங்., பிரமுகர் மிரட்டலால் ஆசிரியர் தற்கொலை

காங்., பிரமுகர் மிரட்டலால் ஆசிரியர் தற்கொலை

காங்., பிரமுகர் மிரட்டலால் ஆசிரியர் தற்கொலை


ADDED : டிச 27, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரின் பேடரஹள்ளியில் வசித்தவர் நரசிம்மமூர்த்தி, 59. இவர், ஜடகனஹள்ளியில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 2025 ஜனவரி 15ல் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

துங்கா நகரில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதன் மதிப்பு, 10 கோடி ரூபாய். இந்த நிலத்தை காங்கிரஸ் பிரமுகர் சதீஷ் என்பவர் வாங்குவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து, 'அக்ரிமென்ட்' செய்து கொண்டார்.

மீதி பணத்தை கொடுக்காமல், நிலத்தை சதீஷ் அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.

நிலத்துக்கான பணத்தை கேட்பதற்காக சதீஷின் வீட்டுக்கு நரசிம்ம மூர்த்தி, சென்றார். ஆனால், அவரோ பணத்தை கொடுக்காமல் மிரட்டியுள்ளார்.

நிலம் பறிபோனதால் விரக்தி அடைந்த நரசிம்மமூர்த்தி, நேற்று அதிகாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், சதீஷின் மோசடி பற்றி விவரித்துள்ளார். பேடரஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us