ADDED : பிப் 22, 2026 01:30 AM

முகத்திரை கிழிப்பு!
மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியில் நீதிபதிகளை ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மிகவும் முக்கியமானது. இதனால், முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமுல் அரசு, இந்த பணிக்கு முழு ஆதரவை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முகத்திரையை நீதிமன்றம் கிழித்துள்ளது.
கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
காத்திருக்காதது ஏன்?
வரி விவகாரத்தில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல், அந்நாட்டுடன் மத்திய பா.ஜ., அரசு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்? மத்திய அரசின் வெளியுறவு கொள்கை திட்டமிடப்படாத ஒன்றா அல்லது அமெரிக்காவிடம் முழுமையாக சரணடைந்து விட்டதா?
மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
தப்பிக்க முயற்சி!
கலப்பட நெய்யில் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட விவகாரத்தில், மற்றவர்கள் மீது பழியை சுமத்தி, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த விசாரணையில், பல்வேறு முட்டுக்கட்டைகளை அவர்கள் போடுகின்றனர். என்ன நடந்தாலும் உண்மையை வெளியே கொண்டு வருவோம். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்

