sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் புகார்

/

நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் புகார்

நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் புகார்

நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் புகார்


ADDED : டிச 22, 2024 04:48 AM

Google News

ADDED : டிச 22, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி நடிகர்கள் அல்லு அர்ஜுன் நடித்த, புஷ்பா -- 2 தி ரூல் என்ற படத்தின் சிறப்பு இரவு காட்சி திரையிடப்பட்டது.

இந்த படத்தை முதல் நாளே பார்ப்பதற்காக ரேவதி, 35, என்பவர் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது ரசிகர்களுடன் படத்தை பார்ப்பதற்காக படத்தின் நாயகனான அல்லு அர்ஜுனும் வந்தார்.

அவரை பார்ப்பதற்காக தியேட்டருக்குள் கூட்டம் அலைமோதியது. இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி மற்றும் அவரது 12 வயது மகன் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், சட்டசபையில் நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:

புஷ்பா - 2 தி ரூல் படத்தை பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வருவதாகக் கூறி டிச., 2ல் போலீசில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, போலீசார் அந்த மனுவை நிராகரித்துவிட்டனர்.

அனுமதி மறுத்த பிறகும், நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தார். வரும் போது, காரின் மேற்புறத்தில் உள்ள ஜன்னலை திறந்து, அதன் வழியே நின்றவாறு ரோட் ஷோ நடத்தினார்.

இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த தகவல் தெரிந்தும் தியேட்டரை விட்டு அவர் உடனே வெளியேறவில்லை. போலீசார் அவரை வெளியேற்றினர்.

இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை இனி தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், ''முதல்வரின் குற்றச்சாட்டுகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. தியேட்டருக்கு செல்லும் போது நான் எந்த ரோட்ஷோவும் நடத்தவில்லை. வாகனத்தில் இருந்தபடி ரசிகர்களை பார்த்து கையை தான் அசைத்தேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us