sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிந்து கடவுள் குறித்து தெலுங்கானா முதல்வர் சர்ச்சை பேச்சு; வலுக்கும் எதிர்ப்பு

/

ஹிந்து கடவுள் குறித்து தெலுங்கானா முதல்வர் சர்ச்சை பேச்சு; வலுக்கும் எதிர்ப்பு

ஹிந்து கடவுள் குறித்து தெலுங்கானா முதல்வர் சர்ச்சை பேச்சு; வலுக்கும் எதிர்ப்பு

ஹிந்து கடவுள் குறித்து தெலுங்கானா முதல்வர் சர்ச்சை பேச்சு; வலுக்கும் எதிர்ப்பு


ADDED : டிச 02, 2025 07:06 PM

Google News

ADDED : டிச 02, 2025 07:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஹிந்து கடவுள் குறித்து, சர்ச்சையாக பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க கோரி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஹிந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? திருமணமாகாதவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார் - அனுமன். இரண்டு முறை திருமணம் செய்பவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார்.

மது அருந்துபவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். கோழி பலிக்கு ஒன்று இருக்கிறது; பருப்பிற்கும் அரிசிக்கும் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழுவிற்கும், அவர்களுக்கு சொந்த கடவுள் இருக்கிறார்' என குறிப்பிட்டார். இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தெலுங்கானா முதல்வர் பேச்சு, ஹிந்து நம்பிக்கைகளை அவமதித்ததாகவும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் பாஜ மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் குற்றம் சாட்டின.இது குறித்து பாஜ தலைவர் பிரவீன் கூறுகையில், ரேவந்த் ரெட்டியின் கருத்துக்களால் மாநிலம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் வெட்கப் படுகிறார்கள் என்றார்.

காங்கிரசுக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் வெட்கமில்லை. எல்லா கூட்டங்களிலும், முஸ்லிம்களால்தான் காங்கிரஸ் உருவாகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். முதல்வர் மன்னிப்பு கேட்டு தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரை கடுமையாக சாடிய பிஆர்எஸ் தலைவர் ராகேஷ் ரெட்டி அனுகுலா, 'ஹிந்து தெய்வங்களை கேலி செய்வது இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு பேஷனாகிவிட்டது' என்றார். மேலும் அவர் கூறியதாவது: கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரேவந்த் ரெட்டி பேசுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடனடியாக ஹிந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகேஷ் ரெட்டி அனுகுலா கூறியுள்ளார்.

முதன்முறையல்ல

ஹிந்து கடவுள்கள் குறித்து சர்ச்சையாக பேசி, ரேவந்த் ரெட்டி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் பாஜ மற்றும் ஹிந்து கடவுளை விமர்சிக்கும் வகையில் பேசிய ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us