sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலியல் வன்கொடுமையின் உச்சம்: தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்

/

பாலியல் வன்கொடுமையின் உச்சம்: தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்

பாலியல் வன்கொடுமையின் உச்சம்: தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்

பாலியல் வன்கொடுமையின் உச்சம்: தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்

18


ADDED : மார் 24, 2025 03:56 PM

Google News

ADDED : மார் 24, 2025 03:56 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்; தெலுங்கானாவில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் உச்சமாக, தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் ஹைதராபாத் புறநகர் பகுதியான மெட்சலில் வசிக்கிறார். தமது மொபைல்போன் கோளாறாகி விட்டதால் அதை சரி செய்ய, ஹைதராபாத்துக்கு புறநகர் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

அவர் பயணித்த பெட்டியில் இவருடன் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் இருந்துள்ளனர். 2 பேர் வழியில் இறங்கிவிட இந்த பெண் மட்டுமே தனித்து இருந்துள்ளார்.

அப்போது அதே ரயிலில் பயணித்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், அந்த பெண்ணை நெருங்கி பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அதை தடுக்க இளம்பெண் முயற்சித்த போது தாக்க முயற்சித்துள்ளான்.

ஒருகட்டத்தில் வாலிபனிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். தலை, கைகளில் ஏற்பட்ட காயங்களுடன் அவர் கீழே விழுந்து கிடப்பதை அவ்வழியே சென்றவர்கள் கண்டு, மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us