sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மறுதேர்தல் நடத்த முயன்ற கிராம மக்களால் பதற்றம்

/

மறுதேர்தல் நடத்த முயன்ற கிராம மக்களால் பதற்றம்

மறுதேர்தல் நடத்த முயன்ற கிராம மக்களால் பதற்றம்

மறுதேர்தல் நடத்த முயன்ற கிராம மக்களால் பதற்றம்


ADDED : டிச 04, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோலாப்பூர்,

மஹாராஷ்டிராவின் மார்க்கட்வாடி கிராமத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் எழுப்பிய மக்கள், மறு தேர்தல் நடத்த ஓட்டுச்சீட்டு முறையில் நேற்று ஏற்பாடு செய்ததை அடுத்து பதற்றம் நிலவியது.

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., - சிவசேனா, தேசியவாத காங்.,கின் மஹாயுதி கூட்டணி, 230 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

சோலாப்பூர் மாவட்டத்தின் மல்ஷிராஸ் சட்டசபை தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் ராம் சத்புதேவை, தேசியவாத காங்., சரத்பவார் பிரிவை சேர்ந்த உத்தம் ஜன்கர், 13,147 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மல்ஷிராஸ் தொகுதிக்கு உட்பட்ட மார்க்கட்வாடி கிராம மக்கள், இந்த வெற்றியில் சந்தேகம் எழுப்பினர். இந்த கிராமத்தில் மொத்தம், 2,000 ஓட்டுகள் உள்ளன; 1,900 பேர் ஓட்டளித்துள்ளனர்.

இதுவரை, தேசியவாத காங்., வேட்பாளர் உத்தம் ஜன்கருக்கு ஆதரவாகவே இந்த கிராமத்தில் ஓட்டளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முறை, ஜன்கர் 843 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்; பா.ஜ., வேட்பாளர் சத்புதே 1,003 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் கிளப்பிய கிராம மக்கள், ஓட்டுச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்தும்படி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, மார்க்கட்வாடி கிராமத்தில் ஓடடுச்சீட்டு முறையில் மறு தேர்தல் நடத்த இருப்பதாக கிராம மக்கள் நேற்று அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, டிச., 2 முதல் 5 வரை இந்த கிராமத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us