sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருமண நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

/

திருமண நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

திருமண நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

திருமண நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து


ADDED : டிச 13, 2024 12:04 AM

Google News

ADDED : டிச 13, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாஸ்திரி பார்க்: வடகிழக்கு டில்லியில் உள்ள விருந்து மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சாஸ்திரி பார்க் அருகே உள்ளி ஒரு விருந்து மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது மாலை 5:01 மணி அளவில் அங்கு தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் மண்டபத்திற்கு விரைந்தன.

திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஓரிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் சிறிது நேரத்தில் முழு பகுதியையும் சூழ்ந்தன.

தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்தின்போது, விருந்து மண்டபத்திற்குள் சிலர் சிக்கிக்கொண்டனர், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us