sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாம் ரைபிள்ஸ் வீரர்களை கொன்ற பயங்கரவாதி கைது

/

அசாம் ரைபிள்ஸ் வீரர்களை கொன்ற பயங்கரவாதி கைது

அசாம் ரைபிள்ஸ் வீரர்களை கொன்ற பயங்கரவாதி கைது

அசாம் ரைபிள்ஸ் வீரர்களை கொன்ற பயங்கரவாதி கைது

1


ADDED : செப் 25, 2025 01:47 AM

Google News

ADDED : செப் 25, 2025 01:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: மணிப்பூரில் கடந்த 19ல் அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள் இருவரை சுட்டுக்கொன்ற பயங்கரவாத குழுவை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டம் நம்போல் பகுதியில். அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கடந்த 19ல் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரு வீரர்கள் உயிரிழந்தனர்; ஐந்து வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பியோடினர்.

இந்நிலையில், காமெங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் நேற்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த கெய்லால், 47, என்ற பயங்கரவாதி பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 19ம் தேதி அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் வாகனத்தை தாக்கிய முக்கிய குற்றவாளி அவர் என்பது தெரியவந்தது.

அவர் அளித்த தகவலின்படி தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்ற குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us