sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நம் நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி! லஷ்கர், ஜெய்ஷ் அமைப்பினர் ஆலோசனை; உளவுத்துறை எச்சரிக்கை

/

நம் நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி! லஷ்கர், ஜெய்ஷ் அமைப்பினர் ஆலோசனை; உளவுத்துறை எச்சரிக்கை

நம் நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி! லஷ்கர், ஜெய்ஷ் அமைப்பினர் ஆலோசனை; உளவுத்துறை எச்சரிக்கை

நம் நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி! லஷ்கர், ஜெய்ஷ் அமைப்பினர் ஆலோசனை; உளவுத்துறை எச்சரிக்கை


ADDED : டிச 09, 2025 01:40 AM

Google News

ADDED : டிச 09, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நம் நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பாக, பாகிஸ்தானின் பஹவல்பூரில், ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் முக்கிய கூட்டம் நடத்தியதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அழிப்பு

இதைத் தொடர்ந்து, மே 7ல் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில், நம் விமானப்படை அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதில், பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட் உட்பட ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், பஹவல்பூரில் செயல்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைமையகம் உட்பட, பயங்கரவாதிகளின் முக்கிய கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில், 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சூழலில், கடந்த மாதம் 10ம் தேதி, தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில், 15 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் என்பது உறுதியானது.

இந்த விவகாரத்தில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பின்னணியில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. டில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இது உறுதியானது.

நம் நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு தாக்குதல் நடத்த பாக்., பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாக, உளவுத்துறை முன்னதாக எச்சரித்திருந்த சூழலில், டில்லியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

கட்டுமானம்

'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் தகர்க்கப்பட்ட முகாம்களில் மீண்டும் கட்டுமான பணிகள் நடப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் பயங்கரவாதிகள் மீண்டும் பெரிய கூட்டத்தை நடத்தி ஆலோசித்ததாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:


பாகிஸ்தானின் பஹவல்பூரில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் செயல்பட்ட பகுதியில், சமீபத்தில் பயங்கரவாதிகள் கூட்டம் நடத்தி முடித்துள்ளனர்-. ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கூட்டாக ஆலோசனை நடத்தியுள்ளனர். லஷ்கர் அமைப்பின் துணை தலைவர் சைபுல்லா கசூரி, அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ராவல்கோட்டில், 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலின் போது அழிக்கப்பட்ட இடத்தில், மீண்டும் கட்டுமான பணிகள் நடந்து வரும் சூழலில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

டில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து, நம் நாட்டில் புதிதாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தது தெரியவந்துள்ளது.

பாக்., ராணுவத்தின் உதவியுடன் இந்த இரு பயங்கரவாத அமைப்புகளும் இணைந்து புதிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடுருவல்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பீம்பர் பர்னாலா, தற்கொலைப் படை தாக்குதலுக்கான மையமாக உருவாகி வருகிறது. அங்கிருந்து, சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தும், பஹவல்பூர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், கடந்த செப்., முதல் நம் எல்லைகளின் வழியாக பாக்., பயங்கரவாதிகள் அதிகளவில் ஊடுருவி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us