ADDED : பிப் 05, 2026 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கார் அருகே ஜோபார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் நம் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
பசந்த்கார் பகுதியில் உள்ள ஜோபார் வனப்பகுதி குகையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
'ஆப்பரேஷன் கியா' என பெயரிடப்பட்டு 20 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ -முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி ரூபானியும் மற்றொரு பயங்கரவாதியும் பலியாகினர்.

