sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக்போஸ்ட்

/

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்


ADDED : ஜன 27, 2024 11:15 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வித் தரம் தாழலாமா?

தம் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கிற அரசியல்வாதிகள் எத்தனை பேர் என சொல்ல முடியுமா? அவங்க பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால் தானே அந்த கஷ்டம், நஷ்டம் எல்லாம், அவர்களின் இதயத்தை வருடும்.

எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், இவர்களின் வாரிசுகளில் ஒரே ஒரு சதவீதம் பேராகிலும் அரசு பள்ளியில் படிப்பார்களா?

அரசை நடத்துகிறவர்களுக்கே அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வராதபோது, கல்வித்தரம் எப்படி இருக்கும்?

அரசு பள்ளி ஆசிரியர்களில் எத்தனை சதவீதம் பேர், அரசு பள்ளிகளில் தம் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். வெளிப்படையாக அறிவிப்பாங்களா. இதுக்கு மாநில கல்வித்துறை என்ன பதிலை தரப்போகுது?

இதனால் தான் தங்கவயலில் நடந்த குடியரசு தின அரசு விழாவில் அரசு பள்ளி மாணவர்களை இடம்பெற செய்யலையோ?

பேருக்கு தான் தங்கமான நகரம்!

நகராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்தினால் அரசு நிதி ஒதுக்க வேணும். நிதி ஒதுக்கு வதை தவிர்த்து காலந்தள்ளவே தேர்தலை நடத்தலயாம்.

இப்படி நிதிநிலை விபரம் தெரிந்தவங்க இதை சொல்றாங்க. இரண்டரை ஆண்டு பதவிக்காலத்தை வீணாக்கிட்டாங்களேன்னு கவுன்சிலர்கள் மனதுக்குள் வருத்தங்கள் வட்டமிடும். ஆனால் இதன் தேர்தலை நடத்த வேணுமென அரசை முறையாக யார் போய் அணுகுவதோ.

அதிகாரிகளின் தர்பாரில் எட்டு மாதங்கள் கழிந்துவிட்டன. இதனால் சாலைகள் கதியை கவனிப்பது யார். குப்பை அகற்றப்படுவதில்லை. குடிநீருக்கு தீர்வு இல்லை. கால்வாய் சீரமைக்கவில்லை. பேருக்கு தான் தங்கமான நகரம். அடிப்படை வசதிகள் இல்லாமல் தரமற்ற நகரமாக மாறலாமா?

மருத்துவ வசதி எப்போ கிடைக்குமா?

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கோல்டு சிட்டியில் நுாற்றாண்டுக்கு முன்னதாகவே ஏற்படுத்தினாங்க.

நாட்டில் முதல் எக்ஸ்ரே கருவி, ஆம்புலன்ஸ், மேஜர் மற்றும் மைனர் ஆப்பரேஷன் தியேட்டர்கள், பிசியோதெரபி, சிலிக்காசிஸ், காச நோய் உட்பட பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு தரமான சிகிச்சை கிடைத்த கம்பெனி மருத்துவமனை மூடப்பட்ட பின், மருத்துவ வசதியே இல்லை.

விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்வதோடு, மேல் சிகிச்சைக்காக வெளியேற்றும் நிலைதான் தொடருது.

சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், ஐ.சி.யூ., உட்பட நவீன மருத்துவ வசதி எல்லாம் வருது வருது என்கிறார்கள். வந்த பாடில்லை.

தலை மீது காரை விழுந்த தெருவில் செருப்பு தைக்கும் ஏழை பெண் தொழிலாளி, பெண்ணுக்கு சிகிச்சை தர முடியாமல் மாவட்ட மருத்துவமனைக்கு வெளியேற்றினாங்க.

ஆனால் இந்த மருத்துவமனைக்கு, அரசு 10 கோடியில் கட்டடம் ஏற்படுத்தினதை தான் பெருசா பேசுறாங்களே தவிர சிகிச்சைக்கு வழியை காணோமே.

இதய நோய்க்கு மருத்துவ வசதி இல்லாமல் இறப்போர் எண்ணிக்கை கூடுதே தவிர குறையலயே. டெலி மெடிசின் வரும்னு சொன்னாங்க. சொன்ன சொல் என்னாச்சு தெரியலையே.






      Dinamalar
      Follow us