sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியர்கள் ரத்தம் கொதிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

/

இந்தியர்கள் ரத்தம் கொதிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

இந்தியர்கள் ரத்தம் கொதிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

இந்தியர்கள் ரத்தம் கொதிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்


ADDED : ஏப் 28, 2025 05:58 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை பார்த்து, ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது. இந்த படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

புதிய வாய்ப்பு


ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, 'மன் கி பாத்' எனப்படும், 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

முன் எப்போதும் இல்லாத வகையில் ஜம்மு - காஷ்மீர் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. கட்டுமான பணிகள் வேகம் எடுத்தன.

ஜனநாயகம் வலுப்பெற்று வந்தது. சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்தது. உள்ளூர் மக்களின் வருவாய் உயர்ந்தது. இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின.

நம் எதிரிகளால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜம்மு - காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே, பயங்கரவாதிகளும், அவர்களை பின்னால் இருந்து இயக்குவோரும் இந்த கொடூர நாசவேலையை பஹல்காமில் நிகழ்த்தி உள்ளனர்.

அந்த புகைப்படங்களை பார்த்து ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

தண்டனை


பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாசவேலையை செய்தவர்களுக்கும், அவர்களுக்கு துணை நின்றவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

நம் தேசத்தின் முன் உள்ள இந்த சவாலை எதிர்கொள்ளும் நம் மன உறுதியை, மேலும் வலுப்படுத்த வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், நம் தேசம் ஒரே குரலில் பேசுவதை உலகமே உற்று நோக்குகிறது.

உலகம் முழுதும் இருந்து கண்டன குரல்கள் ஒலிக்கின்றன. பல்வேறு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் அழைத்தும், கடிதங்கள் எழுதியும் தங்கள் கண்டனங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில், 140 கோடி இந்தியர்களுடன் இந்த உலகமே துணை நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விண்வெளி துறையில் சாதிக்கும் இந்தியா


விண்வெளி துறையில் நம் நாடு நிகழ்த்தி வரும் சாதனைகள் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாட்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான கஸ்துாரி ரங்கனை இரு தினங்களுக்கு முன் நாம் இழந்துவிட்டோம்.
நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் இந்திய இளைஞர்களின் திறமைகள், நவீன கல்வி, விண்வெளி அறிவியல் குறித்து விவாதித்துஉள்ளோம். ஆர்யபட்டா செயற்கைக்கோளை ஏவி இந்த மாதத்துடன், 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த நாட்களை திரும்பிப் பார்க்கையில், விண்வெளி துறையில் நாம் எவ்வளவு முன்னேறி வந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.
இன்றைக்கு ஒரே நேரத்தில், 104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்துள்ளோம். நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். உலக அளவில், குறைவான செலவில் வெற்றிகரமான விண்வெளி திட்டங்களை செய்வதில் நாம் முன்னணியில் உள்ளோம். பல்வேறு நாடுகள் தங்கள் செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி திட்டங்களுக்கு இஸ்ரோவின் உதவியை நாடுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.



தமிழக இளைஞருக்கு பாராட்டு


பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:பீஹார், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டில் மட்டுமே லிச்சி பழங்களை விளைவிக்க முடியும் என கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலை சேர்ந்த வீர அரசு என்ற இளைஞர், லிச்சி மரங்களை பயிரிட்டு, ஏழு ஆண்டுகள் கடுமையாக உழைத்து சாகுபடி செய்துள்ளார்.
அது, அப்பகுதி விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. அதே போல, ராஜஸ்தானை சேர்ந்த ஜிதேந்திர சிங் ரணாவத் என்பவரும் லிச்சி மரங்களை அங்கு வளர்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us