sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இறந்தவர் உடலை மரத்தில் கட்டி துாக்கி சென்ற அவலம் 

/

இறந்தவர் உடலை மரத்தில் கட்டி துாக்கி சென்ற அவலம் 

இறந்தவர் உடலை மரத்தில் கட்டி துாக்கி சென்ற அவலம் 

இறந்தவர் உடலை மரத்தில் கட்டி துாக்கி சென்ற அவலம் 


ADDED : செப் 22, 2024 11:32 PM

Google News

ADDED : செப் 22, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்வார்: சாலை வசதி இல்லாததால், இறந்தவர் உடலை, மரத்தில் கட்டி துாக்கி சென்ற அவலம் நடந்து உள்ளது.

கார்வார் அருகே உள்ளது குட்டஹள்ளி கிராமம். வனப்பகுதிக்குள் உள்ள இந்த கிராமத்திற்கு செல்ல, பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லை. சாலை அமைத்து தரும்படி, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில், குட்டஹள்ளி கிராமத்தின் ராமமுன்னே கவுடா, 65 என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு, கார்வார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

மருத்துவமனையில் இருந்து அவரது உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. கிராமத்திற்குள் செல்ல சரியான சாலை இல்லாததால், 2 கிலோ மீட்டர் துாரத்திற்கு முன்பே, ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது.

ஒரு மரத்தில் ராமமுன்னேகவுடா உடலை கயிற்றால் கட்டி, அவரது உறவினர்கள் துாக்கி சென்றனர். இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வீடியோ பரவியதால், அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us