sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஆன்லைன்' மோசடியில் முதியவர்களே பாதிப்பு

/

'ஆன்லைன்' மோசடியில் முதியவர்களே பாதிப்பு

'ஆன்லைன்' மோசடியில் முதியவர்களே பாதிப்பு

'ஆன்லைன்' மோசடியில் முதியவர்களே பாதிப்பு


ADDED : நவ 12, 2024 05:57 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'ஆன்லைன்' மோசடிகளில் முதியோரே அதிகம் சிக்குவது தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், என்.சி.ஆர்.பி., எனும் தேசிய குற்றப்பதிவு ஆணையகம் வெளியிட்ட அறிக்கையில், ஆன்லைன் மோசடிகளில் அதிகம் பாதிக்கப்பட்டது முதியோரே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவர்களில் பெரும்பாலானோர் ஆன்லைன் தளத்தை சரிவர உபயோகிக்க தெரியாததால், இதுபோன்ற மோசடிகளில் சிக்குகின்றனர். மேலும், போலீஸ் அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் என்ற பெயரில் போலியான நபர்கள், அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதாகவும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு போலீசார் ஒவ்வொரு சனிக்கிழமையும், பெங்களூரு முழுதும் வெவ்வேறு இடங்களில், ஆன்லைன் மோசடிகள் பற்றி முதியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

கடந்த சனிக்கிழமை அன்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 180 பேர் கலந்து கொண்டனர். அப்போது, 'சைபர் குற்றங்களில் சிக்காமல் எப்படி இருப்பது, ஆன்லைன் பாதுகாப்பு' போன்றவை பற்றி கற்றுத்தரப்பட்டது.

போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறுகையில், “60 முதல் 70 வயது உடைய முதியவர்களே ஆன்லைன் மோசடிகளில் அதிகமாக சிக்குகின்றனர்,” என்றார்.






      Dinamalar
      Follow us