sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உறைபனியில் இரவு முழுதும் சிக்கிய தேர்தல் கமிஷனர்

/

உறைபனியில் இரவு முழுதும் சிக்கிய தேர்தல் கமிஷனர்

உறைபனியில் இரவு முழுதும் சிக்கிய தேர்தல் கமிஷனர்

உறைபனியில் இரவு முழுதும் சிக்கிய தேர்தல் கமிஷனர்


ADDED : அக் 18, 2024 01:02 AM

Google News

ADDED : அக் 18, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, உத்தரகண்ட் சென்ற தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமாரின் ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, அங்குள்ள குக்கிராமத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனால், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உறைபனியில் இரவு முழுதும் அந்த கிராமத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் மலை கிராமங்களில் அமைந்துள்ள ஓட்டுப்பதிவு மையங்களில் தேர்தல் அலுவலர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து நேரடியாக அறிவதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், முனிசியாரி தாலுகா அருகே குக்கிராமம் ஒன்றில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த வானிலையில் மீட்பு ஹெலிகாப்டர் வருவதும் சிரமம் என்பதால், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் இரண்டு தேர்தல் அதிகாரிகள், இரண்டு பைலட்டுகள் ஆகியோர் அந்த கிராமத்திலேயே, ஒரு வீட்டில் இரவு முழுதும் தங்கினர்.

அங்கு, வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழ் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை நேற்று காலை சீரடைந்ததும், தலைமை தேர்தல் கமிஷனருடன் ஹெலிகாப்டர் பத்திரமாக புறப்பட்டுச் சென்றது.






      Dinamalar
      Follow us