sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கவர்னருக்கு தனி விருப்ப உரிமை... கிடையாது! தமிழக அரசு வாதம்

/

கவர்னருக்கு தனி விருப்ப உரிமை... கிடையாது! தமிழக அரசு வாதம்

கவர்னருக்கு தனி விருப்ப உரிமை... கிடையாது! தமிழக அரசு வாதம்

கவர்னருக்கு தனி விருப்ப உரிமை... கிடையாது! தமிழக அரசு வாதம்

1


ADDED : பிப் 11, 2025 03:27 AM

Google News

ADDED : பிப் 11, 2025 03:27 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'மசோதா குறித்த விஷயத்தில் முடிவெடுக்க, கவர்னருக்கென தனிப்பட்ட விருப்ப உரிமை எதுவும் கிடையாது' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தமிழக கவர்னர் ரவி, 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாகக் கூறி, கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் நான்கு நாட்களாக நடந்து வந்தது.

தமிழக அரசு சார்பில் முதல் சுற்று வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று கவர்னர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி வாதங்களை முன் வைத்தார்.

ஒப்புதல்


அவர் வாதிட்டதாவது:

பல்கலை துணைவேந்தர் நியமன குழுவில் கவர்னரை நீக்குவது என்ற தமிழக அரசின் முடிவு, கவர்னரின் அதிகாரத்தை பறிப்பதாகும். அதனால் தான், அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

மற்ற மசோதாக்களை பொறுத்தவரை, அவற்றில் நிறைய சட்டப் பிரச்னைகள் உள்ளன; முரண்பாடுகள் அதிக அளவில் உள்ளன என கவர்னர் கருதியதால் தான், இந்த விவகாரங்களில் முடிவெடுக்காமல் இருந்தார்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'மசோதாவை கவர்னர் நிறுத்தி வைக்கிறார் என்றால், அதற்கான காரணத்தை வெளிப்படையாக அரசுக்கு அவர் தெரிவிக்க வேண்டும்; அப்படி செய்தால் தான், அரசுக்கு என்ன பிரச்னை என்பது தெரியவரும். கவர்னர் அவ்வாறு தன் தரப்பு விஷயங்களை வெளிப்படையாக கூறவில்லை என்றால், அவர் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதை, ஒரு அரசு எப்படி தானாக புரிந்து கொள்ள முடியும்.

'இதைத்தான் தமிழக கவர்னர் செய்ய தவறியுள்ளார். மசோதாக்களை மறுபரிசீலனை செய்யுங்கள் எனக்கூறி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிய கவர்னர், அரசு மீண்டும் அதை நிறைவேற்றி அனுப்பி வைத்தால், ஒப்புதல் அளிப்பதை விடுத்து, ஜனாதிபதிக்கு ஏன் அனுப்பி வைத்தார்; இது எந்த சட்ட நடைமுறையில் வருகிறது. இதை எப்படி ஏற்க முடியும்?' என, கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல், ''பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் அதிகாரத்தை பறிக்கும் திருத்தங்களை, மாற்றங்கள் என கூறியதுடன், பல்கலை மானியக் குழு உறுப்பினர்களை கொண்ட தேடுதல் குழுவை அமையுங்கள் என அரசிடம் தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.

அந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், 'துணைவேந்தர்கள் நியமன மசோதாவை இப்போதைக்கு விட்டு விடுங்கள்; மற்ற மசோதாக்களுக்கு வாருங்கள்' என்றனர்.

இதையடுத்து, மீண்டும் வாதங்களை முன்வைத்த அட்டர்னி ஜெனரல், ''ஒரு மசோதாவை எந்த நேரத்திலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. அதற்கான காரணத்தை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.

மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், 'ஜனாதிபதிக்கு மசோதாக்களை எப்போது வேண்டுமானாலும் கவர்னர் அனுப்பி வைக்கலாம் என்றால், பிறகு ஏன் அதை சட்டசபைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சட்டசபையில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி வழங்கியதற்கு பின், அதை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.

'இந்த ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவுபடுத்தி விட்டால், வழக்கின் அத்தனை பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

பரிந்துரை


'தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய ஒரு மசோதாவுக்கு தன்னால் ஒப்புதல் வழங்க முடியாது என்று கவர்னர் இறுதி முடிவு எடுத்துவிட்டார் என்றால், அதை ஜனாதிபதிக்கே அனுப்பி வைத்திருக்க வேண்டியதுதானே? அதை விடுத்து, ஏன் அதை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைத்தார்.

நாங்கள் இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு காரணம், அரசியல் சாசனத்தின்படி மிக முக்கியமான பதவியை அவர் வகிக்கிறார். எனவே, அவர் தன் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், ''கவர்னருக்கு என்று வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரத்தின் அடிப்படையின் வாயிலாக, எந்த ஒரு நிலையிலும் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் பரிந்துரை செய்ய முடியும்; அப்படி செய்துவிட்டார் என்றால், அந்த மசோதா மீதான அவரது அதிகாரம் முழுமையாக முடிந்து விட்டது என்று அர்த்தம்.

''அதன் பின், மசோதா மீது முடிவெடுப்பது ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டது,'' என, வாதிட்டார்.

இதன்பின், தமிழக அரசு சார்பில் இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், 'கவர்னர் என்பவர் அமைச்சரவை குழுவின் அறிவுரைகளுக்கு உட்பட்டவர்.

'மசோதாக்கள் மீது தனியாக அவர் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதற்கான தனிப்பட்ட விருப்ப உரிமை எதுவும் அவருக்கு கிடையாது. அவ்வாறு ஒரு கவர்னர் செயல்பட்டால், அவர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று அர்த்தம்.

'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது; அப்படி இருக்கும் போது, சட்டசபை நிறைவேற்றும் ஒரு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியே தீர வேண்டும்.

'அதிலும் இரண்டாவது முறையாக ஒரு மசோதாவை அரசு அனுப்பி வைக்கிறது என்றால், அதற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியே கிடையாது' என, வாதிட்டனர்.

இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களும் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, அனைத்து மனுதாரர்களும் ஒரு வார காலத்திற்குள் வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

ஒரு வாரம் அவகாசம்








      Dinamalar
      Follow us