sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த மாற்றம்; தென்கொரியா

/

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த மாற்றம்; தென்கொரியா

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த மாற்றம்; தென்கொரியா

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த மாற்றம்; தென்கொரியா

1


ADDED : ஆக 16, 2025 10:21 PM

Google News

1

ADDED : ஆக 16, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சோ ஹூய்ன் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த சோ ஹூய்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டில்லிக்கு வந்தது சிறப்பானதாக நினைக்கிறேன். இந்திய மக்களின் ஆழமான கலாசாரத்திற்கு தலைவணங்குகிறேன். நான் கொரிய நாட்டு தூதராக பணியாற்றியதை நினைத்து பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சிறப்பான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நான் கொரிய நாட்டு தூதராக இருந்த போது, வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கரை, பல்வேறு விஷயங்களுக்காக சந்தித்து பேசியுள்ளேன். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் நாங்கள் இந்தியாவுடன் துணை நிற்கிறோம், என்றார்.






      Dinamalar
      Follow us