sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் ரயில் மோதி 7 யானைகள் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

/

அசாமில் ரயில் மோதி 7 யானைகள் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

அசாமில் ரயில் மோதி 7 யானைகள் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

அசாமில் ரயில் மோதி 7 யானைகள் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

1


ADDED : டிச 21, 2025 05:02 PM

Google News

1

ADDED : டிச 21, 2025 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அசாமில் ரயில் மோதி யானைகள் இறப்பு குறித்து மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது. ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள யானை கூட்டங்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

அசாமில், யானை கூட்டத்தின் மீது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஏழு யானைகள் உயிரிழந்தன. இந்த விபத்தில் ரயிலின் இன்ஜின் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டன. விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை அளிக்கவும், பனிக்காலங்களில் வனவிலங்கு பாதைகளை மேலும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் வனத்துறைக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவிட்டார்.

இந்த விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் புரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. ரயில் மோதி யானைகள் இறப்புக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களில் யானைகளின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். இது குறித்து மேலும் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:

இது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாநில வனத்துறைகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு உடன் பணியாற்ற ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வனவிலங்குகள் ரயிலில் மோதல்களைத் தவிர்க்க, லோகோ பைலட்டுகளுக்கும், வன அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. இவ்வாறு பூபேந்தர் யாதவ் கூறினார்.






      Dinamalar
      Follow us