மே.வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை: விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஐகோர்ட்
மே.வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை: விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஐகோர்ட்
ADDED : ஆக 13, 2024 03:47 PM

கோல்கட்டா: கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கு வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, உரிய விசாரணை நடக்கவில்லை என்றால் சி.பி.ஐ., விசாரணை கோரப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ள கோல்கட்டா உயர்நீதிமன்றம், ஆவணங்களை உடனடியாக அந்த அமைப்பிடம் ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.

