sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஊருக்குள் வந்த குட்டி யானை மக்கள் அலறி அடித்து ஓட்டம்

/

ஊருக்குள் வந்த குட்டி யானை மக்கள் அலறி அடித்து ஓட்டம்

ஊருக்குள் வந்த குட்டி யானை மக்கள் அலறி அடித்து ஓட்டம்

ஊருக்குள் வந்த குட்டி யானை மக்கள் அலறி அடித்து ஓட்டம்


ADDED : மார் 09, 2024 11:15 PM

Google News

ADDED : மார் 09, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடகு: தாயிடம் இருந்து பிரிந்து, ஊருக்குள் உலா வந்த குட்டி யானை விரட்டியதால், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

குடகின் பொன்னம்பேட் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி, ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

நேற்று காலை பொன்னம்பேட் நகருக்குள், குட்டி யானை உலா வந்தது. முதலில் சாதுவாக இருந்த யானை, திடீரென ஆக்ரோஷமாக மாறியது. சாலையில் சென்ற, பொதுமக்களை விரட்டியது. இதனால் அலறி அடித்து ஓடி கடை, வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து, குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி, அதன் கூட்டத்துடன் சேர்த்தனர்.

தாயிடம் இருந்து பிரிந்து, குட்டி யானை ஊருக்குள் வந்து விட்டதாகவும், மீண்டும் தாயுடன் சேர்ந்து இருப்பதாகவும், வனத்துறையினர் கூறி உள்ளனர்.

குட்டி யானை ஊருக்குள் புகுந்தது, மக்களை விரட்டியது ஆகிய காட்சிகள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிஉள்ளது.






      Dinamalar
      Follow us