sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வட்டி கட்டாதவர் மகளை பலாத்காரம் செய்தவர் கைது

/

வட்டி கட்டாதவர் மகளை பலாத்காரம் செய்தவர் கைது

வட்டி கட்டாதவர் மகளை பலாத்காரம் செய்தவர் கைது

வட்டி கட்டாதவர் மகளை பலாத்காரம் செய்தவர் கைது


ADDED : அக் 21, 2024 12:29 AM

Google News

ADDED : அக் 21, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெலமங்களா : கடன் வாங்கியவர், வட்டி கட்டவில்லை என்பதால், அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு, நெலமங்களாவின் மாதநாயகனஹள்ளியில் வசிப்பவர் ரவிகுமார், 39. இவர் வட்டி தொழில் செய்கிறார்.

இவரிடம் ஒருவர், 70,000 ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் சரியான நேரத்துக்கு கடன் தொகையை செலுத்தவில்லை; வட்டி பணமும் கொடுக்கவில்லை.

அசலையும், வட்டியையும் அடைக்கும்படி தகராறு செய்தார். நபரும் 30,000 ரூபாய் கொடுத்தார். மிச்சமுள்ள 40,000 ரூபாய்க்கு வட்டி கட்டும்படி ரவிகுமார் தொந்தரவு கொடுத்தார்.

வட்டி பணத்துக்காக அவ்வப்போது நபரின் வீட்டுக்கு வருவார். அவரது, 17 வயது மகளுக்கு தொல்லை கொடுத்தார். அதுமட்டுமின்றி சிறுமியை பலவந்தமாக முத்தமிட்டார்.

இதை மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்.

நேற்று காலை வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த ரவிகுமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையறிந்த தந்தை, மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசாரும், ரவிகுமாரை கைது செய்தனர். அவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us