sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவி மீது சந்தேகம் இளைஞரை சுட்டவர் கைது

/

மனைவி மீது சந்தேகம் இளைஞரை சுட்டவர் கைது

மனைவி மீது சந்தேகம் இளைஞரை சுட்டவர் கைது

மனைவி மீது சந்தேகம் இளைஞரை சுட்டவர் கைது


ADDED : அக் 13, 2024 11:03 PM

Google News

ADDED : அக் 13, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டியா: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்து, இளைஞரை கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

மாண்டியா, பாண்டவபுராவின் ஷம்போவினஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ், 35. இவர் மும்பையில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். அவ்வப்போது தன் குடும்பத்தினரை பார்க்க, ஊருக்கு வருவார்.

சில நாட்களுக்கு முன், கிராமத்துக்கு வந்திருந்தார். தன் மனைவியுடன், அதே கிராமத்தின் மஞ்சு, 27, பேசி பழகுவதை கண்டார். இதனால் தன் மனைவியுடன், மஞ்சு கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த சிவராஜ், தகராறு செய்ய துவங்கினார்.

நேற்று காலை இவரது வீட்டு திண்ணையில், மஞ்சு அமர்ந்திருந்தார். இவரை பார்த்து கோபம் அடைந்த சிவராஜ், துப்பாக்கியால் சுட்டதில் மஞ்சு தலையில் குண்டு உராய்ந்து சென்றதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

பாண்டவபுரா போலீசார், சிவராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us