sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்னது, ரூ.1,000 கோடியா...? கர்நாடகாவை உலுக்கும் அடுத்த முறைகேடு; சித்தராமையாவுக்கு 'சான்ஸ்'

/

என்னது, ரூ.1,000 கோடியா...? கர்நாடகாவை உலுக்கும் அடுத்த முறைகேடு; சித்தராமையாவுக்கு 'சான்ஸ்'

என்னது, ரூ.1,000 கோடியா...? கர்நாடகாவை உலுக்கும் அடுத்த முறைகேடு; சித்தராமையாவுக்கு 'சான்ஸ்'

என்னது, ரூ.1,000 கோடியா...? கர்நாடகாவை உலுக்கும் அடுத்த முறைகேடு; சித்தராமையாவுக்கு 'சான்ஸ்'

15


UPDATED : செப் 06, 2024 10:35 AM

ADDED : செப் 06, 2024 10:25 AM

Google News

UPDATED : செப் 06, 2024 10:35 AM ADDED : செப் 06, 2024 10:25 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரூ: கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியாக உள்ள மூடா வழக்குக்கு போட்டியாக, முந்தைய பா.ஜ., அரசு மீதான ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை சித்தராமையா கையில் எடுத்துள்ளார்.

மூடா


மைசூரில் உள்ள மூடா எனும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கியதில் ரூ.4,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டது முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது.

இறுதித்தீர்ப்பு


இதனிடையே, தன் மீதான விசாரணைக்கு கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், விசாரணையை தொடர, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் கட்சி மேலிடம் தயாராகி வருகிறது

கொரோனா நிதி


இந்த நிலையில், பா.ஜ., தலைமையிலான முந்தைய கர்நாடகா அரசு கொரோனா நிதியை கையாண்ட விதத்தில் புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதாவது, கொரோனா தொற்று பரவிய சமயத்தில், ரூ.13,000 கோடி செலவிடப்பட்டதில், சுமார் ரூ.1,000 கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும், பல ஆவணங்களை காணவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மிஸ்ஸிங்


இது தொடர்பாக நீதியரசர் டி.குன்ஹாவின் அறிக்கையில், ரூ.1,000 கோடி வரையிலான பணம் செலவிடப்பட்டதற்கான ஆதாரமில்லை என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை


இந்த பரபரப்பான சூழலில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை நேற்று கூடியது. அதில், நீதியரசரின் இந்த அறிக்கை குறித்து விவாதித்ததாக சொல்லப்படுகிறது. தனக்கு நெருக்கடி தரும் பா.ஜ.,வுக்கு பதிலடியாக இந்த விவகாரத்தை கிளப்பி விட சித்தராமையா முடிவெடுத்துள்ளார். வரும் நாட்களில் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் புயல் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us