sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி மக்கள் இன்று நிர்ணயிப்பு...மகுடம் யாருக்கு?:ஹாட்ரிக் அடிக்குமா ஆம் ஆத்மி?

/

டில்லி மக்கள் இன்று நிர்ணயிப்பு...மகுடம் யாருக்கு?:ஹாட்ரிக் அடிக்குமா ஆம் ஆத்மி?

டில்லி மக்கள் இன்று நிர்ணயிப்பு...மகுடம் யாருக்கு?:ஹாட்ரிக் அடிக்குமா ஆம் ஆத்மி?

டில்லி மக்கள் இன்று நிர்ணயிப்பு...மகுடம் யாருக்கு?:ஹாட்ரிக் அடிக்குமா ஆம் ஆத்மி?


ADDED : பிப் 04, 2025 09:39 PM

Google News

ADDED : பிப் 04, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி சட்டசபைத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடக்கிரது. வரும் 8ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

டில்லியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி, 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ., ஆகிய கட்சிகளிடையே கடும் நிலவுகிறது. இருகட்சிகளையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

இதனால், தலைநகர் டில்லியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், இம்முறை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அக்கட்சிக்கும் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வந்தவுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சராக இருந்த ஆதிஷி சிங், முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ள ஆம் ஆத்மி, பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் நிதியுதவி, ஹிந்து கோவில் பூஜாரிகள் மற்றும் சீக்கிய குருத்வாரா கிரந்திகள் ஆகியோருக்கு மாதந்தோறும் 18,000 ரூபாய் நிதியுதவி, மூத்த குடிமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை என வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

அதேநேரத்தில், இலவசம் வழங்கும் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பா.ஜ.,வும் டில்லி தேர்தலில் தன் நிலையை மாற்றிக் கொண்டது. ஆம் ஆத்மியைப் போலவே ப.ஜ.,வும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி, 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர், ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர் என வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது.

இருகட்சிகளுக்கும் கொஞ்சமும் சளைக்காமல் காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி, மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு, புத்த மத தலங்களுக்கு இலவச புனித யாத்திரை என்பது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து, டில்லியில் மீண்டும் ஷீலா தீட்சித் மாடல் ஆட்சியை அமைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை துவக்கியது. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, ஆதிஷி சிங், சஞ்சய் சிங், கோபால் ராய் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைத்து தொகுதிகளிலும் பம்பரம் போல சுழன்று தீவிர பிரசாரம் செய்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களிலும் தினமும் வீடியோக்களை வெளியிட்டு பிரசாரம் செய்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 68 இடங்களில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்லது. மீதி 2 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று என ஒதுக்கியது.

பா.ஜ.,வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியுஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உட்பட மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், யோகி ஆதித்யநாத், நயாப் சிங் சைனி, ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட பா.ஜ., ஆளும் மாநிலம் முதல்வர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் டில்லியில் தீவிர பிரசாரம் செய்துள்ளனர்.

காங்கிரசிலும் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் அனைத்து தொகுதிகளிலும் சுழன்று சுழன்று பிரசாரம் செய்துள்ளனர்.

இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளதால், இது ஆம் ஆத்மிக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 5 மட்டும் வி.ஐ.பி., தொகுதிகளாக கணிக்கப்படுகிறது. புதுடில்லி தொகுதியில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.,வில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, காங்கிரஸ் கட்சியில் சந்தீப் தீட்சித் களம் இறங்கியுள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து புதுடில்லி தொகுதியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. 2013, 2015 மற்றும் 2020 தேர்தல்களிலுமே இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால், இந்த முறை வெற்றியை தக்கவைப்பாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டில்லியில் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் 2013-ம் ஆண்டு தேர்தலில் 25,864 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வியைத் தழுவினார். தற்போது இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் களம் இறங்கியுள்ளார். தன் தாயிடம் இருந்து தொகுதியைப் பறித்த கெஜ்ரிவாலிடம் இருந்து புதுடில்லி தொகுதியை சந்தீப் மீட்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டில்லி முதல்வர் ஆதிஷி சிங் போட்டியிடும் கல்காஜி தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர் ரமேஷ் சிங் பிதுரி, காங்கிரசில் காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அல்கா லம்பா களம் இறங்கியுள்ளனர். கடந்த 2015 மற்றும் 2020 ஆண்டு நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஆதிஷி சிங், ஹாட்ரிக் அடிப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது ஆம் ஆத்மி.

அதேபோல, ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதால், தன் பதவியை ராஜினாமா செய்தார். ஓராண்டுக்கும் மேல் திஹார் சிறையில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். சிசோடியாவை எதிர்த்து பா.ஜ.,வில் தர்விந்தர் சிங் வர்மா, காங்கிரசில் பர்ஹாத் சூரி போட்டியிடுகின்றனர்.

மேலும், ஆம் ஆத்மி ஆட்சியில் அமைச்சராக இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய கைலாஷ் கெலாட் போட்டியிடும் பிஜ்வாசன் மற்றும் மணீஷ் சிசோடியா கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பட்பர்கஞ்ச் ஆகிய தொகுதிகளும் டில்லி தேர்தல் களத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

வாக்காளர்கள் - 1,55,24,858

ஆண் - 83,49,645பெண் - 71,73,952திருநங்கையர் - 1,261



வயது வாக்காளர்

18 - 19 2,08,30220 - 29 25,89,78030 - 39 41,74,82340 - 49 36,44,63950 - 59 24,62,99460 - 69 13,77,90970 - 79 7,89,19080+ 2,77,221








      Dinamalar
      Follow us