sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டவிரோத முதியோர் இல்லத்தில் உடை இல்லாமல் இருந்த அவலம்

/

சட்டவிரோத முதியோர் இல்லத்தில் உடை இல்லாமல் இருந்த அவலம்

சட்டவிரோத முதியோர் இல்லத்தில் உடை இல்லாமல் இருந்த அவலம்

சட்டவிரோத முதியோர் இல்லத்தில் உடை இல்லாமல் இருந்த அவலம்


ADDED : ஜூன் 27, 2025 08:31 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:நொய்டாவில், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட முதியோர் இல்லத்தில், மூதாட்டி கட்டிப்போடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், நொய்டா 55வது செக்டாரில் உள்ள ஆனந்த் நிகேதன் சேவா ஆசிரமத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஒரு மூதாட்டி கட்டிப்போடப்பட்டு இருந்தார். மேலும், காற்று வசதி இல்லாத இருண்ட அறைகளில் முதியோர் அடைக்கப்பட்டு இருந்தனர்.

அதில், சில முதியோர் உடை கூட இல்லாமல் நிர்வாணமாக இருந்தனர். பல மூதாட்டியர் அரைகுறை ஆடை அணிந்து இருந்தனர்.

உ.பி., மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மீனாட்சி பரலா கூறியதாவது:

இந்த முதியோர் இல்லம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து, 42 முதியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறை நடத்தும் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவர்.

ஆனந்த் நிகேதன் சேவா ஆசிரமத்துக்கு, 'சீல்' வைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us