sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

/

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

6


ADDED : ஜூன் 12, 2024 11:15 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:15 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்ததைத் தொடர்ந்து நரேந்திர மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை( பிப்.,09) 3வது முறையாக பிரதமர் ஆக பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மறுநாள், முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை தனித்தனியாக அழைத்து பேசிய பிரதமர் மோடி, அவர்களிடம் வாழ்த்து பெற்றதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீலும், பிரதமராக மன்மோகன் சிங்கும் இருந்தனர். அதற்கு முன், காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா பிரதமராக பதவி வகித்தார். இவரது மகன் எச்டி குமாரசாமி, தற்போது மோடி அரசில் மத்திய அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us