நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில், கடந்த வாரம் மழை கொட்டித் தீர்த்த நிலையில் வெயில் சுட்டெரித்தது.
வெப்பநிலை அதிகபட்சமாக, 35 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இயல்பை விட, 0.8 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், டில்லியில் இன்று, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளது. நேற்று மாலை 4:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு, 120 ஆக இருந்தது. இது, மிதமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.