sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலீஸ்காரர் கையை கடித்த வாலிபர் பைக் சாவியை எடுத்ததால் ஆத்திரம்

/

போலீஸ்காரர் கையை கடித்த வாலிபர் பைக் சாவியை எடுத்ததால் ஆத்திரம்

போலீஸ்காரர் கையை கடித்த வாலிபர் பைக் சாவியை எடுத்ததால் ஆத்திரம்

போலீஸ்காரர் கையை கடித்த வாலிபர் பைக் சாவியை எடுத்ததால் ஆத்திரம்


ADDED : பிப் 13, 2024 07:00 AM

Google News

ADDED : பிப் 13, 2024 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்சன் கார்டன்: போக்குவரத்து விதியை மீறிய, இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்த, போக்குவரத்து போலீஸ்காரரின் கையை கடித்த வாலிபரிடம் விசாரணை நடக்கிறது.

பெங்களூரு நகரில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.

நேற்றும் வில்சன் கார்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஒரு வாலிபர், ஹெல்மெட் அணியாமல் வந்தார்.

அவரை போலீஸ் ஏட்டு தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த வாலிபர், 'உறவினருக்கு உடல் நலம் சரியில்லாததால், அவரை பார்க்க அவசரமாக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறேன்' என்றார்.

ஆனாலும் போலீஸ்காரர், அவரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த சாவியை பறித்தார். இதனால் கோபமடைந்த அந்நபர், போலீஸ்காரரின் கையை கடித்தார். வலி தாங்க முடியாமல் துடித்த அவரை, மற்ற போலீசார் மீட்டனர்.

போலீசார் உடனடியாக ஹொய்சாளா ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த அவர்கள், வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us