sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூன்றாவதும் பெண் குழந்தை மனைவியை கொன்ற கணவன்

/

மூன்றாவதும் பெண் குழந்தை மனைவியை கொன்ற கணவன்

மூன்றாவதும் பெண் குழந்தை மனைவியை கொன்ற கணவன்

மூன்றாவதும் பெண் குழந்தை மனைவியை கொன்ற கணவன்


ADDED : டிச 30, 2024 05:36 AM

Google News

ADDED : டிச 30, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள கங்காகெட் நாகா பகுதியை சேர்ந்தவர் குண்டலிக் உத்தம் காலே, 32. இவரது மனைவி மைனா குண்டலிக். இந்த தம்பதிக்கு 4 மற்றும் 6 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

ஆண் குழந்தை இல்லாததால், மனைவி மைனாவை காலே தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் மைனா மீண்டும் கர்ப்பமானார்.

இதில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கடந்த 26ம் தேதி இரவு தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மூன்றாவதும் பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி, மனைவியுடன் காலே சண்டையிட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த பெட்ரோலை மைனா மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். மைனா, தீப்பற்றி எரிந்தபடி வலி தாங்காமல் தெருவில் அலறித்துடித்தபடி ஓடினார்.

அப்பகுதியினர் விரைந்து தீயை அணைத்து மைனாவை காப்பாற்றினர். எனினும் பலத்த தீக்காயம் அடைந்த மைனா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக மைனாவின் சகோதரி அளித்த புகாரின்படி போலீசார், குண்டலிக் உத்தம் காலேவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us