sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முக அறுவை சிகிச்சை செய்தவர் பலி

/

முக அறுவை சிகிச்சை செய்தவர் பலி

முக அறுவை சிகிச்சை செய்தவர் பலி

முக அறுவை சிகிச்சை செய்தவர் பலி

1


ADDED : செப் 25, 2024 07:34 AM

Google News

ADDED : செப் 25, 2024 07:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு, : கன்னத்தில் இருந்த சிறிய கட்டியை அகற்ற, அறுவை சிகிச்சை செய்தவர் உயிரிழந்தார்.

மங்களூரு உல்லால் அக்கரகெரே பகுதியை சேர்ந்தவர் முகமது மசின், 32. தனியார் நிறுவன ஊழியர். இவரது கன்னத்தில் சிறிய கட்டி இருந்தது. இதை அகற்றுவதற்காக, தனியார் முக அறுவை சிகிச்சை மையத்தில், சில தினங்களாக சிகிச்சை பெற்றார்.

அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்ற வேண்டும் என, சிகிச்சை மைய ஊழியர்கள் கூறினர்.

நேற்று காலை அறுவை சிகிச்சைக்காக, ஒரு அறைக்கு முகமது மசின் அழைத்துச் செல்லப்பட்டார். அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என்று கூறினர்.

ஆனால் மாலை ஆன பின்னரும், அறுவைச்சிகிச்சை அறையில் இருந்து முகமது மசினை அழைத்து வரவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறுவை சிகிச்சை மைய ஊழியர்களிடம் விசாரித்தபோது, முகமது மசின் உடல்நிலை ஏற்ற, இறக்கமாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் கூறினர்.

அதன்படி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். முக அறுவை சிகிச்சை மையம் மீது, கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us