sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒடிஷாவில் வங்க தேசத்தவர் கண்டறியும் பணி மும்முரம்

/

ஒடிஷாவில் வங்க தேசத்தவர் கண்டறியும் பணி மும்முரம்

ஒடிஷாவில் வங்க தேசத்தவர் கண்டறியும் பணி மும்முரம்

ஒடிஷாவில் வங்க தேசத்தவர் கண்டறியும் பணி மும்முரம்


ADDED : மே 21, 2025 03:34 AM

Google News

ADDED : மே 21, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர் : ஒடிஷாவில் சட்ட விரோதமாக குடியேறி, பல வேலைகளில் ஈடுபட்டுள்ள வங்க தேசத்தவர்களை கண்டறிந்து, அவர்களை திருப்பி அனுப்பும் பணியில் அம்மாநில போலீசார் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

நம் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களை கண்டுபிடித்து, அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியில் அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஒடிஷா மாநிலத்தில் பல்வேறு தொழில்களில் வங்க தேசத்தவர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக கட்டுமான தொழில்களில் வங்க தேசத்தவர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்காக மாநிலத்தின் பல இன்ஜினியரிங் நிறுவனங்களுடன் பேசி, வங்க தேசத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோர ஆறு மாவட்டங்கள் வாயிலாக வங்கதேசத்தவர், ஒடிஷாவிற்குள் ஊடுருவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த பகுதிகளில் கணக்கெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒடிஷா மாநில சட்ட அமைச்சர் பிருத்விராஜ் ஹரிச்சந்திரன் கூறும்போது, ''சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தவரை கண்டறியும் பணி துரிதமாக நடந்து வருகிறது,'' என்றார்.

இதையடுத்து, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒடிஷாவில் வங்கதேசத்தவர் வேட்டையை அம்மாநில அரசு துவக்கியுள்ளது.






      Dinamalar
      Follow us