sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உலகின் முதன்மையான நாடு: இளைஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு

/

உலகின் முதன்மையான நாடு: இளைஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு

உலகின் முதன்மையான நாடு: இளைஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு

உலகின் முதன்மையான நாடு: இளைஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு

1


ADDED : ஜூன் 28, 2025 08:27 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 08:27 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்ரா: 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து துறைகளிலும் இந்தியாவை முதன்மையான நாடாக உருவாக்க, இளைஞர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா அருகே உள்ள வின்சோலில் உள்ள ஸ்ரீ கோவிந்த் குரு பல்கலைக்கழகத்திற்கான ரூ.125 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார்.

அமித் ஷா பேசியதாவது:

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினத் தலைவர் கோவிந்த் குருவின் பங்களிப்பு மகத்தானது. அவரை இங்கு நினைவு கொள்கிறேன். பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது இப்பகுதியை சேர்ந்த மக்களை விழிப்புணர்வு செய்ததில் கோவிந்த் குரு சிறந்த பங்காற்றினார்.

அவர் பங்காற்றிய பகுதியில் உள்ள நீங்கள், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய எதிர்கால துறைகளில் தேர்ச்சி பெறுங்கள். இந்திய தாயாரிப்புக்களை வாங்குவதன் மூலம் பொருளாதாரத்தை பலப்படுத்துங்கள்.

ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கொள்கையை பின்பற்றுங்கள்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us