sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கச்சா எண்ணெய் பற்றாக்குறை கிடையாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

/

கச்சா எண்ணெய் பற்றாக்குறை கிடையாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

கச்சா எண்ணெய் பற்றாக்குறை கிடையாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

கச்சா எண்ணெய் பற்றாக்குறை கிடையாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

1


ADDED : அக் 07, 2024 08:59 PM

Google News

ADDED : அக் 07, 2024 08:59 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'கச்சா எண்ணெய் இருப்பு போதுமானதாக இருக்கிறது. பற்றாக்குறை என்ற பேச்சே இல்லை' என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உறுதிபட தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விலை மேலும் உயரும்; கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்றெல்லாம் சர்வதேச அளவில் யூகங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: நாம் கச்சா எண்ணெயை 39 நிறுவனங்கள் மூலம் பெறுகிறோம். இதற்கு முன்னர் 27 நிறுவனங்கள் மூலம் தான் பெற்று வந்தோம். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைக்கிறது.

உலக சந்தையில், புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்துள்ளன. சர்வதேச அளவில் , எங்குமே பற்றாக்குறையே இல்லை. நடப்பு 2024 ஜூலை கணக்கின்படி, கச்சா எண்ணெய் இறக்குமதியில், நாம் ரஷ்யாவிடமிருந்து 44 சதவீதம் பெறுகிறோம். இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.






      Dinamalar
      Follow us