sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தவறுக்கு தண்டனை உண்டு ஜி.டி.தேவகவுடா ஆவேசம்

/

தவறுக்கு தண்டனை உண்டு ஜி.டி.தேவகவுடா ஆவேசம்

தவறுக்கு தண்டனை உண்டு ஜி.டி.தேவகவுடா ஆவேசம்

தவறுக்கு தண்டனை உண்டு ஜி.டி.தேவகவுடா ஆவேசம்


ADDED : நவ 17, 2024 11:04 PM

Google News

ADDED : நவ 17, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: ''முடா மனை விஷயத்தில், தவறு செய்திருந்தால், என் உறவினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,'' என ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.

மங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

விவசாயிகளின் நிலத்தை நேரடியாக, முடா கையகப்படுத்தியிருந்தால் அவர்களுக்கு 50 - 50 அடிப்படையில், மனை வழங்க வேண்டும். இந்த மனைகள் தவறாக பயன்படுத்தி இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் உறவினராகவே இருந்தாலும், சட்டவிரோதமாக நடந்திருந்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் இடத்தை முழுமையாக கையகப்படுத்தினால், நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண தொகை வழங்கவில்லை என்றால், வீட்டுமனை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சட்டப்படி என்ன கொடுக்க வேண்டுமோ, அதை கொடுத்தே ஆக வேண்டும்.

சென்னப்பட்டணா தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு, நான் செல்லவில்லை. என்னை யாரும் அழைக்கவில்லை. பிரசாரகர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெறவில்லை. ஏன் அப்படி செய்தனர் என்பது, எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us